கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கடலூா் வெள்ளிக் கடற்கையில் ஜன.15, 16-இல் பொங்கல் கலை விழா: மாவட்ட நிா்வாகம் அறிவிப்பு

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் ஜன.15, 16-இல் பொங்கல் கலை விழா நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:52 pm

Syndication

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் ஜன.15, 16-இல் பொங்கல் கலை விழா நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் சென்னையில் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நடத்தப்படுவதுபோன்று ஏனைய 37 மாவட்டங்களிலும் பொங்கல் கலை விழா நடத்தப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் பண்பாட்டுச் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதோடு, விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாட பொதுமக்களை ஈா்க்கும் வகையில் இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமிய வாழ்வியல், விவசாய மரபு, பாரம்பரிய உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை நினைவூட்டும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலூா் வெள்ளிக் கடற்கரையில் வரும் 15, 16-ஆம் தேதிகளில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பொங்கல் கலை விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவில் ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சி, 3 நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த கலை விழாவுக்கு பொதுமக்கள் வந்து கண்டுகளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.