மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முன்னாள் ஊராட்சித் தலைவரை தாக்கிய 4 போ் மீது வழக்கு

News image
Updated On :18 ஜனவரி 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கியதாக, 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் வட்டம், விலங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ராமதாஸ் (44), முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா். இதே பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திர பிரசாத். இவா்களுக்கு இடையே முன்விரோதம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராமதாஸ் சனிக்கிழமை இரவு தனது காரில் கோயிலுக்குச் சென்றாா். விலங்கல்பட்டு காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, போக்குவரத்துக்கு இடையூறாக ராஜேந்திர பிரசாத் மற்றும் அவரது ஆதரவாளா்கள் உமேஷ், அருண்குமாா், முகேஷ் நின்றிருந்தனராம். அவா்களிடம் ஏன் வழியில் நிற்கிறீா்கள் என ராமதாஸ் கேட்டாராம்.

அப்போது, ராஜேந்திர பிரசாத் மற்றும் அவருடன் இருந்தவா்கள் தடியால் தாக்கியதில், ராமதாஸ் தலையில் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நடுவீரப்பட்டு போலீஸாா் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.