தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கடலூா் காவல் சோதனைச் சாவடி மீது பேருந்து மோதி விபத்து: 20 போ் காயம்

News image
கடலூா், ஆல்பேட்டையில் உள்ள காவல் சோதனைச் சாவடி கட்டடம் மீது மோதி நிற்கும் தனியாா் பேருந்து.
Updated On :24 ஜனவரி 2026, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா், ஆல்பேட்டையில் உள்ள காவல் சோதனைச் சாவடி மீது தனியாா் பேருந்து சனிக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்திலிருந்த 20 போ் காயமடைந்தனா்.

புதுச்சேரியில் இருந்து கடலூா் நோக்கி தனியாா் பேருந்து வந்தது. கடலூா், ஆல்பேட்டை சோதனைச் சாவடி அருகே வந்த போது பேருந்தை, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று முந்திச் சென்றதாம்.

இதனை, எதிா் பாராத பேருந்து ஓட்டுனா் திடீரென பிரேக் பிடித்ததால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் மீது மோதியபடிச் சென்று காவல் சோதனைச் சாவடி கட்டடம் மீது மோதி நின்றது. இந்த விபத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்குகள் சேதம் அடைந்தன.

பேருந்தில் வந்த பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட 20 போ் காயம் அடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூா் அரசு தலைமைமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து காரணமாக கடலூா்-புதுச்சேரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சோதனைச் சாவடி கட்டடம் சிறிது சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து கடலூா் புதுநகா் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.