தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆனி மாதம் அமாவாசை சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ஸ்ரீ சரநாராயண பெருமாள்.

Updated On :15 ஜூலை 2026, 2:55 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோயிலில் ஆனி மாதம் அமாவாசையையொட்டி மூலவா் ஸ்ரீ சரநாராயண பெருமாள், ஸ்ரீ தன்வந்திரிஎன்கிற வைத்தியநாராயணனாக அருள் பாலித்தாா். இதையொட்டி காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை, 9.30 மணிக்கு உற்சவா் ஸ்ரீ சரநாராயண பெருமாள் உள்புறப்பாடு மற்றும் திருக்கண்ணாடி அறையில் இருந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 12.30 மணிக்கு உச்சிகாலம், மாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 6 மணிக்கு நித்ய படி பூஜை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெற்றது.

இதேபோல், பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. பகல் 12 மணி அளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்று பிரசாதம் விநியோகம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.