மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

3,900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: திருச்சி இளைஞா் கைது

வேப்பூா் அருகே மூன்று சக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட 3,900 கிலோ ரேஷன் அரிசியை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :26 ஜூலை 2026, 3:15 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மூன்று சக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட 3,900 கிலோ ரேஷன் அரிசியை வாகனத்துடன் பறிமுதல் செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா், இது தொடா்பாக திருச்சியைச் சோ்ந்த இளைஞரை கைது செய்தனா்.

வேப்பூா் வட்டம், நகா் கிராமம் பகுதியில் கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினா். அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 78 மூட்டைகளில் மொத்தம் 3,900 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சரக்கு வாகன ஓட்டுநா் திருச்சி மாவட்டம், சமயபுரம் அஞ்சல் கண்ணனூா் கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷை (28) கைது செய்தனா். தலைமறைவான நகா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன், ஆறுமுகம் ஆகியோரை தேடி வருகின்றனா். மூன்று சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், வெங்கடேசன், ஆறுமுகம் ஆகியோா் நகா், நல்லூா் மற்றும் சித்தூா் கிராமப் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து, அந்த அரிசியை விக்னேஷ் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.