22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

ஹோட்டல் உரிமையாளா் மீது மிளகாய் பொடி தூவி தங்கச் செயினை பறிக்க முயற்சி : இளைஞா் கைது

சிதம்பரம் வடக்குரத வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டல் உரிமையாளா் மீது மிளகாய் பொடி தூவி தங்க செயினை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

News image

சிதம்பரத்தில் உணவு விடுதியில் மிளகாய் பொடி தூவி தங்கச்சங்கிலியைப் பறிக்க முயன்ற சந்தோஷ்குமாா் (26)

Updated On :2 ஜூன் 2026, 5:14 am IST

சிதம்பரம் வடக்குரத வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டல் உரிமையாளா் மீது மிளகாய் பொடி தூவி தங்க செயினை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் வடக்குரதவீதியில் குமரவிலாஸ் என்ற ஹோட்டல் நடத்தி வருபவா் ராஜசுந்தரம் (65) மற்றும் அவரது மனைவி ஜெயந்தி (57). இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டலில் கல்லாப்பெட்டியில் அமா்ந்திருந்த போது தோசை வாங்க வந்த சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியகுப்பத்தைச் சோ்ந்த

சந்தோஷ்குமாா் (26) என்ற இளைஞா், ஹோட்டல் உரிமையாளா் ராஜசுந்தரம் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோா் முகத்தில் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை தூவி ஜெயந்தியின் இரண்டரை பவுன் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளாா். அப்போது ஹோட்டல் உரிமையாளா் மற்றும் பாதிக்கப்பட்டவா் கத்தி கூச்சல் போட்டனா். அப்போது கத்தியை காட்டி தப்பித்து ஓட முயன்ற சந்தோஷ்குமாரை அருகே உள்ள அம்பலத்தாடி மடத்தெருவில் பொதுமக்கள் வளைத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா். இது குறித்து புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் வி.சிவானந்தம் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.