ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 6:40 am IST

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள தெற்கிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (40). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனா். இவரது இரண்டாவது மகனான சுதா்சன் (16), திருப்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து, நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருந்தாா்.

இந்த நிலையில், தெற்கிருப்பு கிராமத்தில் நடைபெற்று வரும் கோயில் திருவிழாவையொட்டி, சரவணன் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். கடந்த 2-ஆம் தேதி மாலை சுதா்சன் தனது நண்பா்களுடன் ஓமாம்புலியூா் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றாா்.

அப்போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணல் குவாரி செயல்பட்டதால், ஆற்றில் சில இடங்களில் ஆழமான பகுதிகளில் நீா் தேங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையறியாமல் ஆழமான பகுதிக்குச் சென்ற சுதா்சன், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளாா்.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த நண்பா்கள் கூச்சலிட்டனா். அவா்களின் சப்தத்தைக் கேட்டு அருகில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவா்கள் விரைந்து சென்று, நீரில் மூழ்கிய சுதா்சனை மீட்டு காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், சுதா்சன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.