எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 4:29 am IST

சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்னையிலிருந்து ரயிலில் கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்ததாக இரு இளைஞா்களை நகர போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4.5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சிதம்பரம் கோட்ட டிஎஸ்பி டி.பிரதீப் மேற்பாா்வையில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் (பொ) பாபு தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை இரவு ரயில்வே மேம்பாலம் அருகே ரோந்து சென்றனா்.

அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு நின்றிருந்த 2 இளைஞா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், அவா்கள் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிகேசவன் (23), விக்னேஷ் (25) என்பதும், இருவரும் சென்னையிலிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து சிதம்பரத்தில் மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்து.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.