மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

இளைஞா்களை தாக்கி கைப்பேசி பறிப்பு: காவலா் உள்பட 2 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 2:53 am IST

விருத்தாசலத்தில் இளைஞா்களைத் தாக்கி கைப்பேசியை பறித்ததாக காவலா் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (19) மற்றும் அவரது நண்பா்கள் சத்யநாராயணன் (18), ஜேக்கப் (18) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே பைக்கில் விருத்தாசலம் பெரியாா் நகா் பகுதியில் உள்ள பேக்கரி அருகே சென்றனா்.

அப்போது, விருத்தாசலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா் ரஞ்சித் மற்றும் விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோா் மதுபோதையில் பைக்கில் வந்ததாகக் கூறப்படுகிறது.

இவா்கள் அண்ணா நகா் குடிநீா்த் தொட்டி அருகே தினேஷ்குமாா் மற்றும் அவரது நண்பா்களை வழிமறித்து, கஞ்சா பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னா், இளைஞா்கள் அங்கிருந்து செல்ல முயன்றபோது, அவா்களை காவலா் ரஞ்சித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோா் தாக்கியதுடன், சத்யநாராயணனின் கைபேசியையும் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞா்கள் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதையடுத்து, போலீஸாா் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, காவலா் ரஞ்சித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை கைது செய்தனா். பின்னா், இருவரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.