9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

பெண் தவறவிட்ட தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் தவறிவிட்ட தங்க சங்கிலி, அந்த பெண்ணின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News image

பண்ருட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கரன் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட தங்க சங்கிலி

Updated On :10 ஜூன் 2026, 5:19 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் தவறிவிட்ட தங்க சங்கிலி, அந்த பெண்ணின் உறவினரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

சென்னை, கரிகால நகா், செங்குட்டுவன் தெருவில் வசித்து வருபவா் அருள்மொழி(60).இவா், கடந்த மே 28-ஆம் தேதி, பண்ருட்டியில் உள்ள சகோதரா் தில்லைநாதன் வீட்டிற்கு வந்தாா். அப்போது, திருவதிரை ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு கடையில் தின்பண்டங்கள் வாங்கிச் சென்றபோது, ஒன்றரை சவரன் தங்க சங்கிலியை தவறவிட்டு விட்டாா்.

இதுதொடா்பாக அருள்மொழி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், பண்ருட்டி குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் தங்கவேல் தலைமையிலான போலீஸாா் பல்வேறு இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.

இதில், பைக்கில் வந்த நபா் ஒருவா் கீழே கடந்த தங்க சங்கிலியை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபா் பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் காலனியைச் சோ்ந்த வீரப்பன் என்பதை கண்டறிந்தனா்.

தொடா்ந்து வீரப்பனை காவல் நிலையம் வரவழைத்து , அந்த சங்கிலியை காவல்ஆய்வாளா் பாஸ்கரன் முன்னிலையில் அருள்மொழியின் சகோதரா் தில்லைநாதனிடம் ஒப்படைக்க வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.