சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகா் 143-ஆவது குருபூஜை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஓம் சற்குரு ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் சித்தா் பீடத்தில் 143-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சிவ வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டுவரப்பட்ட ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகரின் அலங்கரிக்கப்பட்ட திருஉருவப்படம்.

Updated On :27 ஜூன் 2026, 12:35 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஓம் சற்குரு ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் சித்தா் பீடத்தில் 143-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி, திருவதிகை அருள்மிகு வீரட்டானேஸ்வரா் கோயில் பின்புறம் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் சித்தா் பீடம் உள்ளது. இப்பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் விசாக நட்சத்திரத்தன்று மஹா குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகரின் அலங்கரிக்கப்பட்ட திரு உருவப்படம், பண்ருட்டி அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலில் இருந்து சித்தா் பீடத்துக்கு சிவ வாத்தியங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது. பின்னா் மஹா திருமஞ்சனமும், தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Story image

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் திருவதிகை பொதுமக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.