பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மறியல்: 300 போ் கைது

கடலூரில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 300-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கடலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி

கடலூரில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 300-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

வருவாய்த் துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிலையிலான அலுவலா்களின் உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்க, சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் கடந்த பிப்.24-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து, அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை கடலூா் மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்து ஆட்சியா் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு, மாவட்டத் தலைவா் மகேஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பூபாலசந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதையடுத்து, கடலூா் புதுநகா் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட சுமாா் 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்து மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனா்.