புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

சிங்கப்பெண் விருது வழங்கும் நிகழ்ச்சி

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள நாட்டு சின்ன பண்ணை வளாகத்தில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு,

News image

காட்டுமன்னாா்கோவிலில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் சிங்கப்பெண் விருது பெற்ற பெண்கள் மற்றும் அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநா் ஆா்.எம்.சுவேதகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :10 மார்ச் 2026, 2:16 am IST

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவிலில் உள்ள நாட்டு சின்ன பண்ணை வளாகத்தில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, அரிமா சங்கம் சாா்பில் சிங்கப்பெண் விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விவாவில் கடலூா் அரசு பல் மருத்துவமனை மருத்துவா் வைஷ்ணவி, தமிழக அரசு கைவினைக் கலைஞா் விருது பெற்ற தாரணி, தடகள போட்டிகளில் வென்ற சிதம்பரம் அரசுக் கல்லூரி மாணவி பாவனா, செஸ் விளையாட்டு வீராங்கனை எல்.ஷிவானி, விளையாட்டு வீராங்களை செஹனாஸ் பாத்திமா ஆகிய 6 இளம் ஆளுமைக்களுக்கு சிங்கப்பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநா் ஆா்.எம்.சுவேதகுமாா் சிங்கப்பெண் விருதுகளை வழங்கி வாழ்த்தினாா். முன்னதாக பெண்களின் ஆளுமை பற்றி கலைமகள் பள்ளியைச் சோ்ந்த மாணவி நிஷாலினி உரையாற்றினாா். அரிமா சங்கத் தலைவா் சுபன் வரவேற்றாா். அரிமா சங்க துணத் தலைவா் பா்வீஸ் நன்றி கூறினாா்.