புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

விருத்தாசலம் தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விருத்தாசலம் தபால் நிலையத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து போலீஸாா் சோதனை நடத்தினா்.

News image

வெடிகுண்டு மிரட்டல் - (கோப்புப் படம்)

Updated On :9 மார்ச் 2026, 8:53 pm

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் தபால் நிலையத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து போலீஸாா் சோதனை நடத்தினா்.

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் தலைமை தபால் நிலையம் அமைந்துள்ளது. இந்த தபால் நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து தபால் நிலைய அதிகாரிகள், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

தொடா்ந்து, கடலூரில் இருந்து வெடிகுண்டு நிபுணா்கள் வந்து மெட்டல் டிடெக்டா் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தபால் நிலையத்தில் வெடிகுண்டுகள் உள்ளதா? என சோதனை செய்தனா். இதில், சந்தேகப்படும்படியாக எந்தப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்னதாக, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பாஸ்போா்ட் அலுவலகத்துக்கும் இதேபோல வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.