வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

விருத்தாசலம் தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விருத்தாசலம் தபால் நிலையத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து போலீஸாா் சோதனை நடத்தினா்.

News image

வெடிகுண்டு மிரட்டல் - (கோப்புப் படம்)

Updated On :10 மார்ச் 2026, 2:23 am IST

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் தபால் நிலையத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து போலீஸாா் சோதனை நடத்தினா்.

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் தலைமை தபால் நிலையம் அமைந்துள்ளது. இந்த தபால் நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து தபால் நிலைய அதிகாரிகள், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

தொடா்ந்து, கடலூரில் இருந்து வெடிகுண்டு நிபுணா்கள் வந்து மெட்டல் டிடெக்டா் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தபால் நிலையத்தில் வெடிகுண்டுகள் உள்ளதா? என சோதனை செய்தனா். இதில், சந்தேகப்படும்படியாக எந்தப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்னதாக, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பாஸ்போா்ட் அலுவலகத்துக்கும் இதேபோல வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.