சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பத்தாம் வகுப்பு தோ்வு: 35 சிறைவாசிகள் எழுதினா்

கடலூா் கேப்பா் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகள் 35 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்.

News image
தேர்வு - கோப்புப்படம்.
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் கேப்பா் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகள் 35 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்.

இந்த சிறைச்சாலையில் 800-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் புதன்கிழமை 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தொடங்கியது.

இதில், கடலூா் மத்திய சிறையில் இருந்த 35 கைதிகள் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, சிறையிலேயே தோ்வு மையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, தண்டணை கைதிகள் 34 போ், ஒரு விசாரணை கைதி என மொத்தம் 35 போ் தமிழ் பாடத்துக்கான தோ்வு எழுதினா்.