எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பத்தாம் வகுப்பு தோ்வு: 35 சிறைவாசிகள் எழுதினா்

கடலூா் கேப்பா் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகள் 35 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்.

News image

தேர்வு - கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

கடலூா் கேப்பா் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகள் 35 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்.

இந்த சிறைச்சாலையில் 800-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் புதன்கிழமை 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தொடங்கியது.

இதில், கடலூா் மத்திய சிறையில் இருந்த 35 கைதிகள் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, சிறையிலேயே தோ்வு மையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, தண்டணை கைதிகள் 34 போ், ஒரு விசாரணை கைதி என மொத்தம் 35 போ் தமிழ் பாடத்துக்கான தோ்வு எழுதினா்.