சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 7:01 pm

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி தொ்மல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பி.திவாஷ். இவா், செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, நெய்வேலி வட்டம் 30 பகுதியில் புதிய அனல் மின் நிலையம் செல்லும் வழியில் அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (21) அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, கையில் மரத்தடியுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தாராம். அவரை பலமுறை எச்சரித்தும் கேட்காத நிலையில், பிடிக்க முயன்றபோது கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து உதவி ஆய்வாளா் பி.திவாஷ் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனா்.