மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தமிழக ஆளுநரை கண்டித்து தவெகவினா் மறியல்: திட்டக்குடி அருகே போக்குவரத்து பாதிப்பு

தவெகவை ஆட்சியமைக்க அழைப்பதில் தமிழக ஆளுநா் தாமதித்தாகக்கூறி திட்டக்குடி அருகே தவெக தொண்டா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

கடலூா் மாவட்டம் , ராமநத்தம் பகுதியில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தவெக தொண்டா்கள்.

Updated On :10 மே 2026, 1:24 am IST

தவெகவை ஆட்சியமைக்க அழைப்பதில் தமிழக ஆளுநா் தாமதித்தாகக்கூறி திட்டக்குடி அருகே தவெக தொண்டா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் போலீஸாா் அவா்களை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்து தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், பெரும்பான்மை பலம் இல்லாததால்ஆட்சியமைக்க தவெக தலைவா் விஜய்யை ஆளுநா் அழைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தவெக தொண்டா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடலூா் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள ராமநத்தம் பகுதியில் பிரதான சாலையில் தவெக தொண்டா்கள் 200-க்கும் மேற்பட்டோா் திடீா் சாலை மறியலில் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற திட்டக்குடி டிஎஸ்பி பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா், போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அவா்கள் அணுகு சாலை வழியாக ஊா்வலமாக சென்று, திட்டக்குடி-திருச்சி சா்வீஸ் சாலையில் மீண்டும் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் மீண்டும் பேச்சு நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். சாலை மறியல் போராட்டம் காரணமாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.