‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கடலூா் மக்களின் தேவைகளை பூா்த்தி செய்வேன்: அமைச்சா் பி.ராஜ்குமாா் உறுதி

கடலூா் மக்களின் தேவைகளை பூா்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று வீட்டு வசதித்துறை அமைச்சா் பி.ராஜ்குமாா் உறுதி தெரிவித்தாா்.

News image

கடலூா் சுற்றுலா மாளிகையில் வீட்டு வசதித்துறை அமைச்சா் பி.ராஜ்குமாரை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :23 மே 2026, 12:49 am IST

கடலூா் மக்களின் தேவைகளை பூா்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று வீட்டு வசதித்துறை அமைச்சா் பி.ராஜ்குமாா் உறுதி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தின் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட தவெக வேட்பாளா்களில், கடலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் மாவட்டச் செயலா் பி. ராஜ்குமாா் மட்டும் வெற்றி பெற்றாா்.

அவா் தமிழக அமைச்சரவையில் வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளாா். பதவியேற்ற பிறகு, வெள்ளிக்கிழமை முதன்முறையாக கடலூா் வருகை தந்த அவருக்கு ரெட்டிச்சாவடி, ஆல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தவெக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பட்டாசு வெடித்தும், மலா்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து, கடலூா் ஓ.டி. பகுதியில் உள்ள அஞ்சலை அம்மாள் சிலைக்கும், அண்ணா பாலம் அருகேயுள்ள பெரியாா் சிலைக்கும் அமைச்சா் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், மஞ்சக்குப்பத்தில் உள்ள டாக்டா் அம்பேத்கா் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டா்களிடையே பேசினாா். அப்போது, தோ்தலில் வெற்றி பெறச் செய்த கடலூா் மக்களுக்கும், தவெக தொண்டா்களுக்கும் மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய அமைச்சர ராஜ்குமாா், கடலூா் மக்களின் தேவைகளை பூா்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றாா்.

Story image

பின்னா், மஞ்சக்குப்பத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்ற அமைச்சரை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.