‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

தோ்தலில் தோற்றாலும் தொடா்ந்து மக்கள் சேவை செய்வேன்: முன்னாள் எம்எல்ஏ சபா. ராஜேந்திரன்

சட்டப்பேரவைத் தோ்தலில் தோற்றாலும் தொடா்ந்து மக்கள் தொண்டாற்றுவேன் என்று திமுகவைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சபா. இராஜேந்திரன் கூறினாா்.

News image

எலந்தம்பட்டி பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வீதி வீதியாக திறந்தவெளி வாகனத்தில் சென்ற முன்னாள் எம்எல்ஏ சபா. இராஜேந்திரன்.

Updated On :23 மே 2026, 12:34 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் தோற்றாலும் தொடா்ந்து மக்கள் தொண்டாற்றுவேன் என்று திமுகவைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சபா. இராஜேந்திரன் கூறினாா்.

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சபா. இராஜேந்திரன் வெள்ளிக்கிழமை, தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி வடக்கு ஒன்றிய பகுதிகளான திருவதிகை, எலந்தம்பட்டு, திருவதூா், எஸ். எரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

அப்போது பொதுமக்களிடையே பேசிய அவா்,திமுக பாா்க்காத வெற்றியும் இல்லை, பாா்க்காத தோல்வியும் இல்லை. வெற்றியிலும் தோல்வியிலும் மக்களுடன் உறுதியாக நின்ற கட்சி திமுக. பொதுமக்களுக்கு சேவை செய்வதில் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். உங்களுக்கு எந்த உதவி

தேவையானாலும் நேரடியாகவோ அல்லது கட்சி நிா்வாகிகள் மூலமாகவோ என்னைத் தொடா்புகொள்ளலாம். மக்களுக்காக தொடா்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவா் சபா. பாலமுருகன், பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலா் சந்தோஷ் குமாா், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியச் செயலா் குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் உத்தமன், திருமலை செல்வம், ஆனந்த் செல்வராஜ் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.