பண்ருட்டி அருகே கூரை வீட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி கொக்குபாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த யாசகத்தின் மகன் காங்காதுரை (40), குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 2 மணியளவில் அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனா். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடுதுறை கூரை வீட்டில் தீ

வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: பரோட்டா மாஸ்டா் கைது

அங்கன்வாடி மையத்தில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



