/
பண்ருட்டி அருகே கூரை வீட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி கொக்குபாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த யாசகத்தின் மகன் காங்காதுரை (40), குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 2 மணியளவில் அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனா். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.










