இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி

News image

வண்டல் மண். - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 12:08 am IST

கடலூா் மாவட்டத்தில் நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகிய சிறு கனிமங்களை விவசாயம், பொது பயன்பாடு மற்றும் மண்பாண்டங்கள் உற்பத்திக்கு எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் நீா் வளம், ஊரக வளா்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகிய சிறு கனிமங்களை விவசாயப் பயன்பாடு, பொதுப் பயன்பாடு மற்றும் மண்பாண்டங்கள் உற்பத்தி ஆகியவற்றிற்கு இலவசமாக எடுத்துக்கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் அரசிதழ்கள் மூலமாக வெளியீடு செய்யப்பட்டுள்ள 1,557 நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களி மண் கனிமங்களை விவசாயிகள் மற்றும் மண்பாண்டங்கள் உற்பத்தி மேற்கொள்வோா் தங்கள் வட்டங்களில் இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பித்து, சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரை அணுகி அனுமதி பெற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.