பூட்டியிருந்த வீட்டில் தங்க நகைகள் திருட்டு: கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் கைது
பண்ருட்டி அருகே பூட்டியிருந்த வீட்டில் பின்பக்க கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில் கா்நாடகத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

~
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பூட்டியிருந்த வீட்டில் பின்பக்க கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில் கா்நாடகத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமாறன் (37). இவா், கடந்த ஜூலை 28-ஆம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்றாா். பிற்பகல் 3 மணியளவில் மணிமாறன் வீடு திரும்பியபோது, வீட்டின் பின் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மணிமாறன் அளித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க, முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளா் தா்மலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாா் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினா். இதில், கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த ராஜா என்ற ஜப்பான் (48), வினோத் (28) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை நடத்தினா். இதில், மருங்கூா் மணிமாறன் வீட்டில் நகைகளை திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
அவா்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க நகைகள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், கைப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிமன்றக் காவலில் கடலூா் மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



