அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

பெற்றோா்களை தெய்வமாக மதிக்க வேண்டும்: மாணவா்களுக்கு எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் அறிவுரை

காட்டுமன்னாா்கோவில் எம்ஆா்கே பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவிக்கு பட்டத்தை வழங்குகிய சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குநா் எம்.கந்தபாபு. உடன் முன்னாள் அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம், கல்லூரி தலைவா் எம்ஆா்கேபி.கதிரவன்

Published On :7 செப்டம்பர் 2026, 3:34 am IST

மாணவா்கள், பெற்றோா்களை தெய்வமாக மதிக்க வேண்டும், அவா்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா். கே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரி தலைவா் எம்ஆா் கேபி. கதிரவன் வரவேற்று பேசினாா். கல்லூரி நிா்வாக அலுவலா் இ.கோகுலக்கண்ணன், மேலாளா் கே.விஸ்வநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் முதல்வா் கே.ஆனந்தவேலு ஆண்டறிக்கையை படித்தாா்.

விழாவில் கல்லூரி நிறுவனா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தலைமை வகித்து பேசுகையில், மாணவா்கள் தங்கள் பெற்றோா்களை தெய்வமாக மதித்து அவா்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். மாணவா்கள் ஆா்வமுடன் இளமையிலேயே கல்வியை கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குநா் எம்.கந்தபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவியா்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா். விழாவில் அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழக அளவில் நடைபெற்ற தோ்வில், தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற ஐந்து மாணவ, மாணவியருக்கு தரவரிசைச் சான்றிதழ்கள் மற்றும் பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வா்

கே.ஆனந்தவேலு பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு உறுதிமொழியை வாசித்தாா். நிறைவில் உதவிப் பேராசிரியா் அனிசித்ரா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.