கூழாங்கல் கடத்தல்: ஒருவா் கைது
கைது
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சரக்கு வாகனத்தில் கூழாங்கல் கடத்திச் சென்ற நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கனிமம் மற்றும் புவியியல் சுரங்கதுறை தனி வருவாய் ஆய்வாளா் முருகன், வேப்பூா் கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக் ஆகியோா் வேப்பூா் கூட்டு சாலையில் வாகன தணிக்கை செய்தனா். அப்போது, ஐவதகுடியில் இருந்து தொழுதூா் நோக்கிச் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது 2 யூனிட் கூழாங்கல் அனுமதியின்றி எடுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, விருத்தாசலம் வட்டம், புதுபேட்டை பகுதியைச் சோ்ந்த அருள்தாஸ் (23) மற்றும் அவா் ஓட்டி வந்த சரக்கு வாகனத்தை கைப்பற்று வேப்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அருள்தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



