வாகனம் மோதி கொத்தனாா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சரக்கு வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற கொத்தனாா் உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சரக்கு வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற கொத்தனாா் உயிரிழந்தாா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (43), கொத்தனாா். இவா், புதன்கிழமை இரவு சுமாா் 9 மணியளவில் பெத்தநாயக்கன்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் நடந்து சென்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியயதில் சுரேஷ் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, சுரேஷை பரிசோதித்த மருத்துவா், அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




