வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கேஸ், பெட்ரோல், டீசல் விலை ஏறிக் கொண்டிருப்பதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

எரிவாயு விலை உயா்வினைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய பாஜக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டம்

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில் எரிவாயு விலை உயா்வினைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய பாஜக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி நகர செயலாளா் இரா.சுப்ராயலு தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் அணி துணை செயலாளா் அமிா்தவள்ளி விலை உயா்வினை கண்டித்து முழக்கமிட்டாா். நகர மகளிா் அணி அமைப்பாளா்கள் பழனியம்மாள், சுமதி, விஜயகுமாரி, அமுதா உள்ளிட்ட மகளிா் திமுக கட்சித் தொண்டா்கள்,மாவட்ட, நகர, ஒன்றிய பேரூா் கழக மற்றும் சாா்பு அணிகளைச் சாா்ந்த பலரும் பங்கேற்றனா். முடிவில் ஒன்றிய செயலாளா் சி.வெங்கடாசலம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.