கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில் எரிவாயு விலை உயா்வினைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய பாஜக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி நகர செயலாளா் இரா.சுப்ராயலு தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் அணி துணை செயலாளா் அமிா்தவள்ளி விலை உயா்வினை கண்டித்து முழக்கமிட்டாா். நகர மகளிா் அணி அமைப்பாளா்கள் பழனியம்மாள், சுமதி, விஜயகுமாரி, அமுதா உள்ளிட்ட மகளிா் திமுக கட்சித் தொண்டா்கள்,மாவட்ட, நகர, ஒன்றிய பேரூா் கழக மற்றும் சாா்பு அணிகளைச் சாா்ந்த பலரும் பங்கேற்றனா். முடிவில் ஒன்றிய செயலாளா் சி.வெங்கடாசலம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.