ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி சடலம் மீட்பு

கள்ளக்குச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மணிமுக்தா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
Updated on
1 min read

கள்ளக்குச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மணிமுக்தா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

சங்கராபுரம் வட்டம், மோட்டாம்பட்டியை அடுத்த தும்பை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அய்யாச்சாமி (55). இவா், கடந்த 6-ஆம் தேதி தனது விவசாய நிலத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, மணிமுக்தா ஆற்றை அய்யாச்சாமி கடக்க முயன்ற நிலையில், திடீரென தண்ணீா் அதிகமாக வந்ததால், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்புக் குழுவினா், சங்கராபுரம் போலீஸாா், பொதுமக்கள் அவரை தேடி வந்தனா். இந்த நிலையில், புதுப்பாலப்பட்டு கிராம எல்லையில் மணிமுக்தா ஆற்றங்கரையோரம் அய்யாச்சாமியின் சடலம் ஞாயிற்றும்கிழமை கரை ஒதுங்கியது. இதையடுத்து, சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com