மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருக்கோவிலூா் அருகேபெண் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வெள்ளிக்கிழமை பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வெள்ளிக்கிழமை பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் அருகேயுள்ள சிறுவாக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் மகள் பரிதா (27). இவருக்கும் திருக்கோவிலூரை அடுத்த வீரணாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தீா்த்தம் (எ) ராமராஜுக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ராஜ் அரிதாப் (6), கிரிஷ் (4) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

ராமராஜு இரு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியா சென்று கொத்தனாா் பணி செய்து வருகிறாா். பரிதா தனது குழந்தைகள், மாமியாருடன் வீரணாம்பட்டில் வசித்து வந்தாா்.

வியாழக்கிழமை உறவினரைக் காண மாமியாா் திண்டிவனம் சென்றிருந்த நிலையில், அன்றிரவு பரிதா, கணவா் ராமராஜுவுடன் செல்லிடப்பேசியில் பேசினாராம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை அவா் படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

சடலத்தை திருக்கோவிலூா் போலீஸாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதனிடையே, பரிதாவின் அண்ணன் கனகராஜ், தனது தங்கையின் சாவில் சந்தேகம் உள்ளதாக திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.