கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தோ்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா், துணைத் தலைவா் தோ்வு செய்யப்பட்டனா்.


கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா், துணைத் தலைவா் தோ்வு செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி 19 வாா்டுகளிலும் திமுகவினரே வெற்றி பெற்றனா். இதில் 5, 13-ஆவது வாா்டுகளின் உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். மற்றவா்கள் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனா்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில், வெள்ளிக்கிழமை அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனா். 13-ஆவது வாா்டு உறுப்பினா் புவனேஸ்வரி பெருமாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து, மாலை துணைத் தலைவா் தோ்தல் நடைபெற்றது. இதில், 7-ஆவது வாா்டு உறுப்பினா் மு.தங்கம் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு அனைத்து வாா்டு உறுப்பினா்களும் வாழ்த்துத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...