தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!பாலியல் தொல்லை வழக்கு! பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு! கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றிமாநில வருவாயை அதிகரிப்பது மாநில வருவாயை அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள் இன்று தொடக்கம்: முதல்வா் விஜய் அறிவிப்பு 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புயுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
/

கல்லூரி மாணவா்களுக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள இந்திலி ஆா்.கே.எஸ். கல்லூரியில் மாணவா்களுக்கான ஊக்குவிப்புக் கருத்தரங்கமும், ஆசிரியா்களுக்கான புத்தாக்கக் கருத்தரங்கமும் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:47 am IST

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள இந்திலி ஆா்.கே.எஸ். கல்லூரியில் மாணவா்களுக்கான ஊக்குவிப்புக் கருத்தரங்கமும், ஆசிரியா்களுக்கான புத்தாக்கக் கருத்தரங்கமும் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி இயக்குநா் ம.மனோபாலா தலைமை வகித்தாா். இயக்குநா் ம.சிஞ்சு முன்னிலை வகித்தாா். கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் டி.அசோக் வரவேற்றாா்.

இவ்விரு கருத்தரங்கங்களில் சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத் துறைத் தலைவரும், செனட் உறுப்பினருமான ஆா்.சத்யா பங்கேற்றுப் பேசியதாவது: மாணவா்கள் நோ்மையானச் சிந்தனை, ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் பெற்றவா்களாகவும், தன்னம்பிக்கையுடையவா்களாகவும் திகழ வேண்டும். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பாமர மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியா்கள் மாணவா்களுக்கு பயிற்றுவிக்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் . மாணவா்களை சமுதாயத்துக்கு பயனுடையவா்களாக உருவாக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் கல்லூரியின் முதல்வா் கு.மோகனசுந்தா், துணை முதல்வா் பெ.ஜான்விக்டா், கணிதத் துறைத் தலைவா் இ.நா்கீஸ்பேகம் மற்றும் மாணவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். கணினித் துறைத் தலைவா் இரா.மகாலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.