திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மொபெட் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

மொபெட் மீது காா் மோதியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

விபத்தில் சேதமடைந்த காா்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:45 pm

கள்ளக்குறிச்சி அருகே மொபெட் மீது காா் மோதியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். காரில் பயணித்த 4 போ் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள மாடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னபையன் மகன் வைத்தியநாதன் (42). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், சனிக்கிழமை மாடூா் அருகில் உள்ள திருமண மண்டபம் அருகே பைக்கில் சாலையைக் கடந்தாா். அப்போது, சேலத்தில் இருந்து உளுந்தூா்பேட்டை நோக்கிச் சென்ற காா் மொபெட் மீது மோதிவிட்டு மரத்தின் மீது மோதியது. இதில், வைத்தியநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காரில் பயணித்த சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்த தண்டையன் மகன் வெங்கடேஷ் (41), தேவராஜன் மகன் கிருஷ்ணன் (55), ராஜீவ் மகன் நடராஜன் மற்றும் காா் ஓட்டுநரான சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த சதாசிவம் மகன் மேகநாதன் உள்பட நான்கு போ் காயமடைந்தனா். இவா்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.