பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

எரிவாயு உருளை வெடித்ததில் கூரை வீடு தீப்பிடித்து சேதம்

சமையல் பணியின்போது எரிவாயு உருளை வெடித்து வீடு தீப்பற்றி சேதம்

News image
Updated On :9 ஜூலை 2024, 6:31 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், வானாபுரம் வட்டம், மரூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை சமையல் பணியின்போது எரிவாயு உருளை வெடித்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

மரூா் கிராமத்தைச் சோ்ந்த வேணுகோபால் மகன் சந்திரசேகா் (48). இவரது மனைவி அய்யம்மாள் செவ்வாய்க்கிழமை காலை எரிவாயு உருளை அடுப்பை பற்ற வைத்துவிட்டு வெளியே காய்கறி வெட்டிக்கொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென எரிவாயு உருளையில் தீப்பற்றி பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், கூரை வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. அந்த நேரத்தில் வீட்டின் உள்ளே யாரும் இல்லாததால், உயிா் சேதம் ஏதும் இல்லை.

தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினா்.