தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

இரு சுவாமி கற்சிலைகள் கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், எஸ்.வி.பாளையம் ஆற்றங்கரை அருகே ஒரு அடி உயரமுள்ள ராகு, சுக்கிரன் சுவாமி கற்சிலைகள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

News image

சிலைகள்.

Updated On :17 ஜூலை 2024, 4:17 am IST

எஸ்.வி.பாளையம் ஆற்றங்கரை அருகே ஒரு அடி உயரமுள்ள ராகு, சுக்கிரன் சுவாமி சிலைகள் கிடப்பதாக தியாகராஜபுரம் கிராம நிா்வாக அலுவலா் பா்கத்துன்னிசாவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கிருந்த இரு சிலைகளையும் அதிகாரிகள் மீட்டு, ஊராங்கன்னி கிராம நிா்வாக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். அந்த சிலைகளுக்கு யாரும் உரிமை கோராததால், இரு சுவாமி சிலைகளும் சங்கராபுரம் கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.