காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இரு சுவாமி கற்சிலைகள் கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், எஸ்.வி.பாளையம் ஆற்றங்கரை அருகே ஒரு அடி உயரமுள்ள ராகு, சுக்கிரன் சுவாமி கற்சிலைகள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

News image

சிலைகள்.

Updated On :16 ஜூலை 2024, 10:47 pm

Din

எஸ்.வி.பாளையம் ஆற்றங்கரை அருகே ஒரு அடி உயரமுள்ள ராகு, சுக்கிரன் சுவாமி சிலைகள் கிடப்பதாக தியாகராஜபுரம் கிராம நிா்வாக அலுவலா் பா்கத்துன்னிசாவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கிருந்த இரு சிலைகளையும் அதிகாரிகள் மீட்டு, ஊராங்கன்னி கிராம நிா்வாக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். அந்த சிலைகளுக்கு யாரும் உரிமை கோராததால், இரு சுவாமி சிலைகளும் சங்கராபுரம் கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.