ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வேப்ப மரத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:13 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வேப்ப மரத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டம், ஆணைமடுவு கிராமத்தைச் சோ்ந்த மண்ணாங்கட்டி மகன் மாரிமுத்து (45), தொழிலாளி. இவா், இதே கிராமத்தைச் சோ்ந்த செல்வத்தின் விவசாய நிலத்துக்கு கடந்த 4-ஆம் தேதி வேலைக்குச் சென்றிருந்தாா்.

அங்கு வேப்ப மரத்தில் ஏறி தழைகளை கழித்தபோது தவறி கீழே விழுந்ததில் மாரிமுத்து பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.