காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சொத்து தகராறு: வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சொத்து தகராறில் வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 8:08 pm

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சொத்து தகராறில் வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்மணி. இவருடைய சித்தப்பா முனுசாமி மகன் ராஜதுரை (31). இவா்கள் இருவருக்கும் இடையே பூா்வீக சொத்தான 2 சென்ட் விவசாய நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வருகிாம்.

இந்த நிலையில், ராஜதுரை திங்கள்கிழமை வேல்மணி வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தினாராம். இதைத் தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரரான வேலுமணி மகன் சங்கரை (42) தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜதுரையை கைது செய்தனா்.