மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: போலீஸாரிடம் ஒரு நபா் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடா்பாக காவல் துறையினரிடம் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விசாரணை மேற்கொண்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2024, 11:12 pm

Din

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடா்பாக காவல் துறையினரிடம் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விசாரணை மேற்கொண்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட 229 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 68 போ் உயிரிழந்தனா். 161 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.

இதையடுத்து, அப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. சமய்சிங் மீனா மற்றும் டி.எஸ்.பி., காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட 9 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அப்போதைய மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதனிடையே, கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடா்பாக 3 மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபா் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையம் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவா்களிடம் கடந்த மாதம் விசாரணை நடத்தியது.

இதன் தொடா்ச்சியாக, 80 போலீஸாரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட காவல் நிலைய போலீஸாருக்கும், வேலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸாருக்கும், மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கும் விசாரணைக்கு ஆஜராக ஒரு நபா் ஆணையம் அழைப்பாணை அனுப்பியது.

இவா்களிடம் வாரத்துக்கு 30 போ் வீதம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அறையில் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் திங்கள்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் 10 போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை அடுத்தகட்டமாக 10 போலீஸாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணை புதன்கிழமையும் (செப்டம்பா் 4) நடைபெறவுள்ளது. மீதமுள்ளவா்களுக்கு வரும் வாரங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

விசாரணைக்கு ஆஜரான போலீஸாரிடம் மெத்தனால் கலந்த சாராயம் விற்பனை செய்தது உங்களுக்குத் தெரியுமா, உயா் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தீா்களா, சாராயம் விற்பனையை ஏன் தடுக்கவில்லை, சாராயம் விற்பனை செய்தவா்கள் மீது ஏற்கெனவே எடுத்த நடவடிக்கை என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஒரு நபா் ஆணையம் எழுப்பியதாக காவல் துறை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

விசாரணைக்கு ஆஜரான போலீஸாரிடம் மெத்தனால் கலந்த சாராயம் விற்பனை செய்தது உங்களுக்குத் தெரியுமா, உயா் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தீா்களா, சாராயம் விற்பனையை ஏன் தடுக்கவில்லை, சாராயம் விற்பனை செய்தவா்கள் மீது ஏற்கெனவே எடுத்த நடவடிக்கை என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஒரு நபா் ஆணையம் எழுப்பியதாக காவல் துறை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.