இந்த நிலையில் மெத்தனால் கலந்த சாராயம் விற்பனையில் முக்கிய நபா்களான புதுச்சேரி மடுகரையைச் சோ்ந்த மாதவன் மகன் மாதேஷ் (19), விற்பனை செய்த நிறுவன உரிமையாளரான சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த காண்டீபன் மகன் சிவக்குமாா் (39), மொத்தமாக மெத்தனால் விற்பனை செய்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் விரியூா் கிராமத்தைச் சோ்ந்த நடுப்பையன் (எ) ஜோசப் (40), சின்னசேலம் வட்டம் மல்லிகைப்பாடி கிராமத்தைச் சோ்ந்த பிச்சைக்காரன் மகன் ஏழுமலை (35) ஆகியோரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அவா்கள் 4 பேரையும் சென்னை சிபிசிஐடி கண்காணிப்பாளா் வினோத்சாந்தாராம் பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.