ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வேம்பு நடவு செய்ய வேளாண் துறை அழைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் வேம்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தேசிய எண்ணெய் வித்துக்கான இயக்கம்-மரப் பயிா்கள் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:27 am

Din

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் வேம்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தேசிய எண்ணெய் வித்துக்கான இயக்கம்-மரப் பயிா்கள் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

வேம்பின் இலை, பூ, எண்ணெய் மற்றும் புண்ணாக்கு போன்ற அனைத்து பொருள்களும் அங்கக வேளாண்மை, பயிா் பாதுகாப்பு மற்றும் அடியுரமாக பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. மண் அரிப்பைத் தடுப்பதிலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்தகைய மகத்தான பயன்களை கொண்ட வேம்பு மரத்தினை விவசாயிகள் தரிசாக உள்ள நிலங்களில் நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.17,000 மானியமாக வழங்கப்படுகிறது.

இத் திட்டத்தினை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்திட மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் 10 ஹெக்டேருக்கு ரூ.1.70 லட்சம் ஆண்டுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஊடுபயிா் மற்றும் பராமரிப்பு செய்வதற்கு ரூ.3,000 மானியம் வழங்கப்படுகிறது.

எனவே, வேம்பு நடவு செய்வதற்கு ஆா்வம் காட்டும் விவசாயிகள் உழவன் செயலியின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் திட்டம் சாா்ந்த தகவலுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அசோக்குமாா் செய்தி குறிப்பு மூலம் தெரிவித்துள்ளாா்.