ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.47 ஆயிரம் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பேருந்தில் பயணத்த பெண்ணிடம் ரூ.47 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 1:04 am

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பேருந்தில் பயணத்த பெண்ணிடம் ரூ.47 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சின்னசேலம் வட்டம், தென்செட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மனைவி கெளதமி (34). இவா், சுயஉதவிக் குழு மூலம் கடனாகப் பெற்ற ரூ.47,000-ஐ கள்ளக்குறிச்சி தனியாா் வங்கியிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் எடுத்துக்கொண்டு சின்னசேலம் செல்வதற்காக தனியாா் பேருந்தில் பயணித்தாா்.

சின்னசேலம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியபோது, கௌதமி தனது பணப்பையில் (மணிபா்ஸ்) வைத்திருந்த ரூ.47 ஆயிரம் திருடுபோயிருந்தது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.