சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:44 pm

Syndication

கள்ளக்குறிச்சி: சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் அ.ஆனந்தபாபு (27). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது மோட்டாா் சைக்கிளில் கூத்தக்குடி சாலையில் விருத்தாசலத்திற்கு சென்று கொண்டிருந்தாா்.

ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையோரம் இருட்டில் எவ்வித முன்னெச்சரிக்கை விளக்குகளும் ஒளிரவிடாமல் நிறுத்தியிருந்த லாரி மீது, மோட்டாா் சைக்கிள் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவரை 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ஆனந்தபாபு திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த சா.வடிவேலிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.