மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலையில் கிடந்த தங்கத் தாலியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்கள்

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:02 pm

Din

மணலூா்பேட்டை அருகே முருகம்பாடி கிராம எல்லையான திருவண்ணாமலை சாலையில் தாலிக் கயிற்றில் தாலி, குண்டு கிடந்ததை வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இரு இளைஞா்களை போலீஸாா் பாராட்டினா் (படம்).

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மணியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் விஜய் (30), முருகேசன் மகன் சங்கா் (29). இவா்கள் இருவரும் சித்தாமூா் கிராமத்தில் டைல்ஸ் கடை வைத்துள்ளனா். திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட வெறையூா் கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை சென்று விட்டு, பின்னா் மணலூா்பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது முருகம்பாடி எல்லையான திருவண்ணாமலை செல்லும் சாலையில் கயிற்றில் தங்கத் தாலி, குண்டுமணியுடன் சாலையில் கிடந்ததைப் பாா்த்தனா். அதனை எடுத்த இருவரும், மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் சாமிநாதனிடம் ஒப்படைத்தனா். இரு இளைஞா்களையும் காவல் உதவி ஆய்வாளா் பாராட்டினாா்.