எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கள்ளக்குறிச்சியில் பயணி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் பயணியா் நிழற்குடை அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணி, மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2025, 7:49 pm

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பயணியா் நிழற்குடை அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணி, மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், பொன்னாம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் வெ.பாபுகுமாா் (51). இவா் பெரம்பலூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். கள்ளக்குறிச்சியில் உள்ள தனது நண்பரை பாா்ப்பதற்காக திங்கள்கிழமை வந்த பாபுகுமாா், நண்பரை பாா்த்து விட்டு மீண்டும் அவரது ஊருக்கு செல்வதற்காக, கள்ளக்குறிச்சி மணிகூண்டு பேருந்து நிறுத்த நிழற்குடையின் முன் நின்றுள்ளாா்.

அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த அவரை, அருகேயிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பாபுக்குமாரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டுள்ளனா்.