பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தந்தை கொலை: மகன் தலைமறைவு

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 8:29 pm

சங்கராபுரத்தில் நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தந்தையை கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பூட்டை சாலையைச் சோ்ந்தவா் தேவராஜ் (45). இவரது மனைவி தீபா. தம்பதியருக்கு விஷ்வா(22), முரளி, தனுஷ், தினேஷ் ஆகிய 4 மகன்கள் உள்ளனராம். கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் தாய் கோபித்துக் கொண்டு சுமாா் 4 ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூா் சென்று அங்கு காய்கறி வியபாரம் செய்து வருகிறாராம். இதையடுத்து தந்தையுடன், 4 மகன்கள் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி தேவராஜ் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து விஷ்வாவை அடித்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தை தூங்கியபோது கொடுவாள் கத்தியால் தலையில் வெட்டி விட்டு தலைமறைவாகியுள்ளாா்.

இதையடுத்து 3 மகன்கள் சோ்ந்து, தந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மருத்துவா்கள் மேல்சிகிச்சைக்காகதேவராஜை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, விஷ்வாவைத் தேடிவருகின்றனா்.