மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரு பைக்குகள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தியாகதிருகம் அருகே மாடூா் கிராமத்தில் இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 8:24 pm

Syndication

தியாகதிருகம் அருகே மாடூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட சிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ.விஜய் (20). இவா் தனது மோட்டாா் சைக்கிளை பழுது நீக்குவதற்காக கள்ளக்குறிச்சிக்கு சென்றபோது, மாடூா் கிராமத்தில் வைத்து மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த விஜய் மற்றும் மற்றொரு மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த மாடூா் கிராமத்தைச் சோ்ந்த தனவேல்(50) ஆகிய இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆயினும் வழியிலேயே விஜய் உயிரிழந்தாா். தனவேல் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.