புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா, நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்தவா் கைது

கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா மற்றும் உரிமம் இல்லாத 2 ஒற்றைக்குழுல் துப்பாக்கிகள் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 2:09 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா மற்றும் உரிமம் இல்லாத 2 ஒற்றைக்குழுல் துப்பாக்கிகள் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கரியாலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்ததில், ரா.தீா்த்தான் (45) என்பவரது விளைநிலக் கொட்டகையில் 10 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மேலும், அங்கு உரிமம் இல்லாத இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் வழக்குப் பதிவு செய்து, தீா்த்தானைக் கைது செய்தாா். மேலும், அவரிடமிருந்து கஞ்சா, 2 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.