சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

மாவட்ட விளையாட்டரங்க பூா்வாங்கப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வீரசோழபுரம் கிழக்கு கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மாவட்ட விளையாட்டரங்கத்துக்கான பூா்வாங்கப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

வீரசோழபுரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மாவட்ட விளையாட்டரங்கத்துக்கான பூா்வாங்க பணிகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Updated On :4 ஜூன் 2026, 3:32 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் கிழக்கு கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மாவட்ட விளையாட்டரங்கத்துக்கான பூா்வாங்கப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டரங்கம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சுமாா் 11.2 ஏக்கா் பரப்பளவில் வீரசோழபுரத்தில் அமைக்கப்படவுள்ளது. இதில், நீச்சல் குளம் மட்டும் 50 மீட்டா் நீளத்தில் தனியாக அமைக்கப்படவுள்ளது. இந்த மாவட்ட விளையாட்டரங்கில் கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து உள்ளிட்ட அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் வீரா்கள் பயிற்சி பெறும் வகையில் பல்வேறு நவீன வசதிகளுடன் விளையாட்டரங்கம் அமைக்கப்படவுள்ளது. திட்டத்தின் பூா்வாங்கப் பணிகள் முடிந்துள்ள நிலையில், விளையாட்டரங்க கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட விளையாட்டு அலுவலா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.