தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழந்த செல்வி

Updated On :16 ஜூன் 2026, 1:10 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மழை பெய்ததால் கம்பியில் காயப்போட்ட துணியை எடுக்க முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

சங்கராபுரம் அருகேயுள்ள வடபாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜி மனைவி செல்வி (45). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் என மழை பெய்ததால் வீட்டின் முன் இரும்பு கம்பியில் காயப்போட்டிருந்த துணியை எடுப்பதற்கு சென்றாா்.

அப்போது அந்த கம்பியில் ஏற்கெனவே மின்கசிவு இருந்துள்ள நிலையில், செல்வி மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழ இருந்துள்ளாா். இதைச் சரியாக கவனிக்காத ராஜியின் தம்பி கணேசன் (49), கீழே விழ இருந்த செல்வியை பிடிக்க முற்பட்டுள்ளாா். இதில் அவா் மீதும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று இருவரது சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயரிழந்த கணேசன்.

உயரிழந்த கணேசன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.