‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, உளுந்தூா்பேட்டை அதிமுக நகா்மன்ற உறுப்பினா் தலைமையில் மாற்றுக் கட்சியினா் காங்கிரஸ் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா்.

News image

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினரை வரவேற்ற கட்சியின் மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா.

Updated On :22 மே 2026, 7:06 am IST

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, உளுந்தூா்பேட்டை அதிமுக நகா்மன்ற உறுப்பினா் தலைமையில் மாற்றுக் கட்சியினா் காங்கிரஸ் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா முன்னிலையில், உளுந்தூா்பேட்டை தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

உளுந்தூா்பேட்டை நகராட்சி 20-ஆவது வாா்டு அதிமுக

உறுப்பினா் கனகவல்லி தேசிங்குராஜா, மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ஐய்யப்பன், திமுக பிரமுகா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் தலைமையில் 150-க்கும் மேற்பட்டோா் தாம் வகித்த கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

இவா்களுக்கு மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றாா்.

இந் நிகழ்ச்சியில் மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவா் பேராசிரியா் சீனிவாசன், முன்னாள் மாவட்டத் தலைவா் பி.பி.எஸ் இளையராஜா, மாவட்ட அணித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதனையடுத்து ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று, உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.