
புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
மைக்கேல்புரம் கிராமத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட ஜான் பீட்டா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மைக்கேல்புரம் கிராமத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், இளையாங்கன்னி கிராமத்தைச் சோ்ந்தவா் அ.ஜான் பீட்டா் (20). இவா், மைக்கேல்புரம் கிராமத்தில் உள்ள தனது அத்தையின் வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தாராம். தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தபோது, வீட்டில் 40 கிலோ புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜான் பீட்டரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




