புதுச்சேரி, ஜன. 8: புதுச்சேரி மகளிர் ஆணையம் சார்பில் திருமணப் பதிவு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது.
சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி சான்றிதழ்களை வழங்கினார். எம்எல்ஏ டாக்டர் எம்ஏஎஸ் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மகளிர் ஆணையத் தலைவி எஸ். கமலினிஸ், நகர் மன்ற உறுப்பினர் ஏ. சத்தியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 550 தம்பதிக்கு திருமணப் பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.